நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: 100 சதவீதம் விவிபேட் ஒப்புகையுடன் வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான, 2 நீதிபதிகள் அடங்கிய, கோடை விடுமுறை கால அமர்வு, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
சென்னையை சேர்ந்த 'டெக் ஃபார் ஆல்' என்ற அமைப்பு சார்பில், இப்படி ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் இன்று அதிரடியாக சில கருத்துக்களை முன் வைத்தது.

சென்னை அமைப்பு
டெக் ஃபார் ஆல் அமைப்பு தாக்கல் செய்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளை தவிர்க்க, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று அறியும் விவிபேட் இயந்திரத்திலுள்ள தகவலுடன் ஒவ்வொரு ஓட்டையும், ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கோரப்பட்டது.

நியூசென்ஸ்
இந்த வழக்கை, 'நியூசென்ஸ்' என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இந்த நாடு அதன் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கட்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தது. "வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு புகார் தொடர்பாக ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்போது ஏன் 2 நீதிபதிகள் அடங்கிய, விடுமுறைக்கால அமர்வு முன்னிலையில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். நாங்கள் தலைமை நீதிபதி தீர்ப்பை மாற்றி எழுத முடியாது. இது 'நான்சென்ஸ்'. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

21 எதிர்க்கட்சிகள்
விவிபேட் ஒப்புகை சீட்டில் 50 சதவீதத்தையாவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என வலியுறுத்தி 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த சீராய்வு மனுவை தலைமை நீதிபதி அமர்வு மே 7ம் தேதி தள்ளுபடி செய்தது. ஆனால் லோக்சபா தொகுதிக்குள் அடங்கும் ஒவ்வொரு சட்டசபை தகுதியிலும் 5ல் ஒரு பூத்தில் விவிபேட் ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கால தாமதம்
இந்த உத்தரவின் காரணமாகத்தான், லோக்சபா தேர்தல் ரிசல்ட் வெளியாக, வழக்கத்தைவிட, இம்முறை, கூடுதலாக, காலதாமதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 23ம் தேதி, அதாவது வியாழக்கிழமை, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், நள்ளிரவு வரையும் கூட வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications