தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்!
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மீது பாலியல் புகார் அளித்த பெண், மூன்று நீதிபதிகள் விசாரணை குழு முன்பாக இன்று ஆஜராகினார்.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மீது பாலியல் சீண்டல் புகார் தெரிவித்து, 22 நீதிபதிகளுக்கு பிரமாணப் பத்திரம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து விசாரிக்க, மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில், இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு முன்னிலையில், புகார் கூறிய பெண் இன்று ஆஜரானார். அப்போது, உடன் வந்த நீதிமன்ற செயலாளர், அப்பெண் கொடுத்த பிரமாணப் பத்திரங்கள், ஆவணங்களை, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகிய இரு பெண் நீதிபதிகளிடம் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
விசாரணையின்போது, நீதிமன்ற ஹாலுக்குள், புகார் அளித்த பெண்ணை தவிர வேறு யாரும் இருக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரின் பின்னணியில் பெரும் சதி உள்ளதாக வழக்கறிஞர், உற்சவ் பயின்ஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த, அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளது. அந்த குழு, பின்னணியில் உள்ள சதி குற்றச்சாட்டு பற்றி விசாரிக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications