ஜாமீன் பெற கூகுள் லொகேஷன்.. இனி இப்படி எல்லாம் நிபந்தனை விதிக்கக்கூடாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: ஜாமீனில் வெளிவர வேண்டும் எனறு விரும்புவோருக்கு அதாவது பிணையில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்களின் இருப்பிடங்கள் குறித்த கூகுள் லொகேஷன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் ஜாமீன் கேட்டு மனு அளித்த போது, டெல்லி உயர்நீதிமன்றம் முக்கியமான நிபந்தனை விதித்தது.அதாவது குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வந்த பிறகு வெளியே செல்லும் போது , எங்கே எல்லாம் செல்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூகுள் லோக்கேசனை போலீசுக்கு பகிர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த ரூல் ஜாமின் பெறுவோருக்கு நிபந்தனையாக விதிக்கப்படுவது தொடர்கிறது.

இதேபோல் நைஜீரிய இளைஞரான குற்றம்சாட்ட நபர், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்பதற்கான உத்தரவாதத்தை டெல்லி நைஜீரியன் கமிஷனிடம் பெற வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பையன் தலைமையிலான அமர்வு, பிணையில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்களின் இருப்பிடங்கள் குறித்த கூகுள் லொகேஷன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தனியுரிமை உரிமைகளை மீறுவதற்கு சமம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் பிணை பெறுவதற்கான நிபந்தனையாக கூகுல் லொக்கேசனை விசாரணை அமைப்புகளிடம் பிணை பெரும் நபர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் தனியுரிமையைப் பார்க்கவும் ஜாமீன் நிபந்தனையாக கூகுள் லோக்கேசன் பகிர்வது இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் சம்பந்தபட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் நைஜீரியர் என்கிற நிலையில், அவர் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்று நைஜீரிய உயர் ஆணையத்திடம் இருந்து உத்தரவாதம் பெறுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையையும் உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. மொத்தத்தில் ஜாமீன் வழங்குவதன் நோக்கத்தைத் தோற்கடிக்கும் நிபந்தனைகள் இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications