சுஷ்மா சுவராஜ் மறைவால் அதிர்ச்சி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் குவியும் தலைவர்கள்.. தொண்டர்கள் கண்ணீர்!
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர்கள் குவிந்து வருகிறார்கள்.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே பாஜக தலைவர்கள் பலர் வரிசையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிய தொடங்கினார். பிரகாஷ் ஜவடேக்கர், ஷாநவாஸ் ஹுசைன், மனோஜ் திவாரி, மஹேந்திர நாத் பாண்டே உள்ளிட்ட தலைவர்கள் இன்று இரவு 10 மணிக்கே மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.
என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!
இந்த நிலையில் தற்போது பாஜக அல்லாத டெல்லியை சேர்ந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் குவித்து வருகிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அங்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இல்லாமல் பாஜக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன் திரளாக குவிந்து வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இவருக்கு நல்ல நண்பர் என்பதால் அவரும் டெல்லிக்கு புறப்பட உள்ளார். பல மக்களுக்கு வித்தியாசம் பார்க்காமல் ஓடோடி உதவிய தலைவர் என்பதால், இவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் குவித்து வருகிறார்கள்.
அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி எய்ம்ஸ் ஆகியோர் டெல்லியில் சுஷ்மாவின் வீட்டில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது












Click it and Unblock the Notifications