முதல்வரான பின் முதல்முறையாக சோனியா, ராகுலை சந்தித்த ஸ்டாலின்.. உடன் சென்ற துர்கா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
டெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஸ்டாலின் மனைவி துர்காவும் உடன் சென்றிருந்தார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அரை மணி நேரம் தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து அவரிடம் கலந்துரையாடினார். 5.30 மணிக்கு அவர்களது சந்திப்பு நிறைவடைந்தது.
இதனையடுத்து கூட்டணி கட்சியினரான கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் எச்சூரி, டி.ராஜாவை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் இன்று காலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். சோனியா காந்திக்கு பொன்னாடையும் புத்தகமும் பரிசாக அளித்தார். ராகுல்காந்திக்கு சிவப்பு நிற பொன்னாடையை போர்த்தி வாழ்த்து கூறினார்.
வழக்கமாக கூட்டணிக் கட்சித்தலைவர்களை சந்திக்க செல்லும் போது நாடாளுமன்ற எம்பிக்கள் உடன் செல்வது வழக்கம். ஆனால் சோனியா காந்தி, ராகுல்காந்தியை ஸ்டாலின் சந்திக்க சென்ற போது அவரது மனைவி துர்காவும் உடன் சென்றார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிறது கொரோனா 3ம் அலை.. இன்னும் 2-4 வாரங்களில் மகாராஷ்டிராவில் தொடங்கும்.. டாஸ்க் போர்ஸ் வார்னிங்!
எதிர்கட்சித்தலைவராக, திமுக தலைவராக பலமுறை டெல்லி சென்றிருந்தாலும் தமிழ்நாடு முதல்வரான பின்னர் முதன் முறையாக டெல்லி சென்ற மு.க ஸ்டாலினுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.