காவிரி ஆணையமும் முதுகில் குத்தியது! மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம்!
டெல்லி: காவிரியில் கர்நாடகா வினாடிக்கு 18,000 கன அடிநீர் திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையத்தை உச்சநீதிமன்றம் அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையமானது அமைக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. வரம்பை மீறி கர்நாடகாவின் மேகதாது அணை கட்டுமானம் குறித்து எல்லாம் ஆணையம் ஆலோசித்த போது தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா கடந்த 9-ந் தேதி வரை திறந்துவிட வேண்டிய 37.9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா முறையாக திறந்துவிட மறுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை கர்நாடகா மறுத்ததால் தமிழ்நாடு பிரதிநிதிகள் ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை காவிரியில் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்ற தீர்ப்புப் படியும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்புப்படியும் திறந்துவிடப்பட வேண்டிய உரிய அளவு நீரை உடனே திறக்க தமிழ்நாடு வலியுறுத்தி வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இது தொடார்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை உடனடியாக உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடும் என தெரிகிறது.
காவிரியில் கர்நாடகா உரிய நீரை திறந்துவிட மறுத்ததால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் காவிரி பாசன விவசாயிகள் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications