உணவு பாதுகாப்பு தரகுறியீட்டு அறிக்கை.. சாதித்த தமிழகம்.. முதலிடத்தை பெற்று அசத்தல்!
டெல்லி: பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் தொடர்பான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை குஜராத்தும் 3ஆவது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது. மேலும் சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்தையும் மணிப்பூர் இரண்டாவது இடத்தையும் சிக்கிம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அது போல் யூனியன் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர், டெல்லி, சண்டீகர் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. வெற்றி பெற்ற மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை பரிந்துரைத்த 5 காரணிகளை வைத்து உணவு பாதுகாப்பில் மாநிலங்களின் செயல்பாட்டை மாநில உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் ஆய்வு செய்யும். இதை வைத்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் வரிசைப்படுத்தும்.
"மாநிலங்கள் தங்களது மக்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார உணவு பழக்கவழக்கங்களை உறுதி செய்வது முக்கியமான பணி. சுகாதாரமான தேசத்தை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றுபடுவது இந்த சூழலுக்கு தேவையானதொன்று என மத்திய அமைச்சர் மன்சுக் பேசினார்.












Click it and Unblock the Notifications