இப்பவே முடியல.. இன்னும் வெப்பம் அதிகரிக்க போகுதாம்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த பகீர் வார்னிங்!
டெல்லி: கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் வெப்பம் கடுமையாக அதிகரித்து வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களில் வெப்பம் நிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பம் தகிக்கத் தொடங்கியுள்ளது. காலையில் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால், பகல் வேளைகளில் வெளியில் சென்று விட்டு வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிடுவதாக மக்கள் புலம்பாத குறைதான். வெளியில் சென்று விட்டாலே வியர்வையில் குளிக்கும் நிலைதான் இருப்பதாக மக்கள் ஆதங்கத்துடன் சொல்லும் அளவுக்கு வெயில் தகிக்க தொடங்கிவிட்டது.

கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் வெப்பம் கடுமையாக அதிகரித்து வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களில் வெப்பம் நிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரபிரதேச கடலோர பகுதிகள், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 4-5 நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பான அளவை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. 13-17 ஆம் தேதிகளில் மேற்கு வங்காளத்தின் ஒரு சில பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவில் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் வெப்ப அலை வீசும்" என்றும் எச்சரித்துள்ளது.
கோவா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்ப நிலை அதிகரிப்பால் நாடு முழுவதும் மக்கள் வெப்ப காலங்களில் பேண வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை, தர்ப்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவைகளும் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதெபோல், பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகள் அணிய வேண்டும். 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியம் இன்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications