தமிழக மாணவர்களுக்கு.. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஏன்? தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி
டெல்லி: தமிழ்நாட்டில் போதுமான தேர்வு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்போது, தமிழக மாணவர்களுக்கு எதற்காக வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்? என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான Swayam (ஸ்வயம்) தேர்வு மையங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் உள்ள மையங்களையே தேர்வு செய்திருந்தபோதிலும், அவர்களுக்குத் தேர்வெழுத கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். இந்த அறிவிப்பால் அண்டை மாநிலங்களுக்குப் பயணம் செய்தல், அங்கே தங்குமிடம் மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகளைச் சமாளிப்பது என்பது அவர்களுக்கு மிகக் கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. தேர்வுக்குத் தயாராக வேண்டிய நேரத்தில், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு கடும் உளவியல் அழுத்தத்தை கொடுக்கிறது.
தமிழ்நாட்டில் போதுமான தேர்வு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் நிலையில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியது நியாயமற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தும் தேர்வுகளில் இதுபோன்ற பிராந்திய ரீதியான திட்டமிடல் இல்லாததால் மீண்டும் மீண்டும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய தொடர்ச்சியான தவறுகள், தேசியத் தேர்வு முகமையின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. வளரும் மாணவர்களுக்கு எதிரானதாகவும் உள்ளது.
தேர்வுத் தேதி நெருங்கிவிட்டதால், தேசியத் தேர்வுகள் முகமைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து, பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி தமிழ்நாட்டிற்குள் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications