சிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
டெல்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில், 10 % இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்ட விதிகள் 15 மற்றும் 16-ல் திருத்தங்களை சமீபத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது

மேற்கண்ட சட்ட விதிகளில் திருத்தம் செய்த 103-வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது பின்னர் இச்சட்டத்தின்படி, இடஒதுக்கீடு வழங்க அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ கடந்த ஜனவரியில் வெளியிட்டது. சிபிஎஸ்சி நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு நாடு முழுவதும் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது இத்தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை எனக்கூறி ரஜ்னீஷ் குமார் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
இந்த வழக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் உள்ள ஆசிரியர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தகுதி தேர்வுக்கு எந்த இட ஒதுக்கீடும் இருக்க முடியாது இது முற்றிலும் தவறான கருத்து மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் வேலையில் சேருவதற்கான தகுதியை அடைவதற்கான ஒரு தேர்வு மட்டுமே இதில் இட ஒதுக்கீடு என்பது வேலையில் சேரும் போது மட்டுமே வரும் என நீதிபதிகள் விளக்கம் அளித்திருந்தனர்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜ்னீஷ் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன என விளக்கம் அளித்தார்
இதனையடுத்து இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்சி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications