செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் போட்டு இருக்கீங்களா.. உடனே இதை பண்ணுங்க.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: பெண் குழந்தைகளுக்கான சுகன்யாக சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி அளிக்கப்படுவதால், முறைகேடாக ஒரு பெண் குழந்தை பெயரில் இரண்டு சேமிப்புகளை தொடங்கி உள்ளார்கள்.அப்படி தொடங்கப்பட்ட இரு சேமிப்பு கணக்குகளில் ஒன்றை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள முறைகேடான கணக்குகளை நீக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் சுகன்யாக சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தையின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை பொறுத்தவரை ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சேமிப்பை கணக்கை ஆரம்பிக்கலாம்.
ஒருவேளை முதல் பிரசவத்திலோ அல்லது 2-வது பிரசவத்திலோ இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் 2-க்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிகரான வட்டி விகிதம் எந்த திட்டத்திற்கும் கிடையாது. வங்கிகளில் சேமித்தாலும், எப்டியில் போட்டாலும் இவ்வளவு சேமிப்பு வேறு எதிலும் இல்லை..
இதன் காரணமாக பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினர் ஆர்வமுடன் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கினார்கள். 100 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தையின் பெயரில் போட முடியும் என்பதால், ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலகத்திற்கு வந்து தங்களின் சேமிப்பை இதில் தான் பல தாய்மார்கள் சேமிக்கிறார்கள். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்டு மாத இறுதி வரை 4 கோடியே 85 ஆயிரத்து 942 சேமிப்பு கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 466 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாடு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 36 லட்சத்து 92 ஆயிரத்து 712 சேமிப்பு கணக்குகள் மூலம் 25 ஆயிரத்து 853 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கிகள், தபால் அலுவலகங்களில் நிரந்தர, தொடர் வைப்புத்தொகை போன்றவற்றுக்கு வழங்கப்படும் வட்டியை விட கூடுதல் வட்டி வழங்கப்படுவதால் ஒரே குழந்தையின் பெயரில் இரு கணக்குகள் தொடங்கப்படுவது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.. தாய் தனியாகவும், தந்தை தனியாகவும், தங்களது மகள் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி சேமித்து வருகிறார்கள்.
ஆனால் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை பொறுத்தவரை ஒரு குழந்தையின் பெயரில் ஒரே ஒரு சேமிப்பு கணக்குதான் தொடங்கப்பட வேண்டும் என 2019-ம் ஆண்டு மத்திய அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் அதையும் மீறி இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதற்காக முறைகேடாக சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் கணக்குகளை நீக்கி செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் பெயரில் ஒரே ஒரு சேமிப்பு கணக்குதான் இருக்க வேண்டும் என்றும், மாறாக இரு சேமிப்பு கணக்குகள் இருக்கும்பட்சத்தில் அதில் ஒரு சேமிப்பு கணக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும் , தபால் அலுவலகங்கள், வங்கிகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள முறைகேடான கணக்குகளை அக்டோபர் 1-ந் தேதிக்குள் நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, முறைகேடாக தொடங்கப்பட்ட ஏராளமான செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தபால் அலுவலகங்கள், வங்கி நிர்வாகங்கள் நீக்கி வருகின்றன. தற்போதைய நிலையில் நீக்கப்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருப்புத்தொகை வேறு சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்பட உள்ளது. இதுவரை இரு கணக்குகளில் ஒரு சேமிப்பு கணக்கை நீக்காதவர்களுக்கு, முதல் ஒரு கணக்கிற்கு மட்டுமே 8.2 சதவீத வட்டி கணக்கிடப்பட உள்ளதாவும். மற்றொரு கணக்கிற்கு எந்தவித வட்டியும் கணக்கிடப்படாது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications