நிர்பயா குற்றவாளிகளுக்கு வாதாடிய வழக்கறிஞர்... ஹத்ராஸ் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகிறார்!!
டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், ஹத்ராஸ் பாலியல் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார்.
இவரை இந்த வழக்கில் வாதாடுவதற்கு உயர் ஜாதி அமைப்பான அகில பாரதிய ஷத்ரிய மஹாசபா நியமித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மன்வேந்திர சிங்தான் இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார். ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடுவதற்கும் ஏ.பி.சிங்கை ராஜா மன்வேந்திர சிங்தான் நியமித்து இருக்கிறார்.

இதுகுறித்து பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டு இருக்கும் ராஜா மன்வேந்திர சிங், ''ஹத்ராஸ் வழக்கில் வாதிடுவதற்காக பெரிய பணம் வசூலித்துள்ளோம். உயர் ஜாதி வகுப்பினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எஸ்சி/எஸ்டி வகுப்பினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராஜ்புட் வகுப்பினரை இது மிகவும் பாதிக்கிறது.
ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஏ.பி.சிங் வாதிடுவார். இந்த வழக்கில் உண்மையை ஏ.பி.சிங் வெளியே கொண்டு வருவார்'' என்று தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உயர் ஜாதி வகுப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சர்வன் சமாஜ் என்ற அமைப்பினர் குற்றம்சட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதி கேட்டு தர்ணா செய்து இருந்தனர். அப்போது, அப்பாவிகளை தண்டிக்கக் கூடாது. குற்றவாளிகளை விட்டு விடக் கூடாது என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இவர்களுக்கு ஆதரவு கோரி பஞ்சாயத்தும் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக ஹத்ராஸ் பாஜக எம்எல்ஏ வீடு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications