6 கோரிக்கைகள்.. இவற்றை நிறைவேற்றுங்கள்.. டெல்லி போலீசார் வைத்த கிடுக்கிப்பிடி வேண்டுகோள்!
Recommended Video
டெல்லி: வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு எதிராக, டெல்லியில் போராடிவரும் போலீசார், தங்களது 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என கோரியுள்ளனர்.
திஸ் ஹசாரே நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் போலீசாரை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டி, டெல்லியில், இன்று, போலீசார் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். போலீஸ் கமிஷனரை சந்திக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து அவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் திருப்தியில்லை என்று கூறி போலீசார், போராட்டத்தை தொடருகிறார்கள். போலீசார் மொத்தம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகள் இவைதான்:
1. இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்தவும்
2. காயமடைந்த போலீஸ் அதிகாரிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
3. வக்கீல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை
4. இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
5. போலீஸ்காரர்களைத் தாக்கிய நபர்களை அடையாளம் காட்ட வேண்டும்
6. கீழமை அளவிலுள்ள போலீசாருக்கும் சங்கம் அமைக்க வேண்டும்