"பச்சை கொடி".. 4 ஏசி கோச் + 4 ஏசி சேர்.. இந்தியா - பங்களாதேஷ் இடையே 3வது ரெயில் சேவை இன்று துவக்கம்
இந்தியா - வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரெயில் சேவை இன்று முதல் துவக்கம்
டெல்லி: இந்தியா - வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரெயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது... இதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து, இந்த 2 நாட்டு ரயில்வே அமைச்சர்களும் கொடியசைத்து இன்று தொடங்கி வைக்க போகிறார்கள்.
இந்தியா-வங்காளதேசம் இடையிலான பயணிகள் ரெயில் சேவை, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், இந்த 2 நாடுகளுக்கு இடையிலான ரெயில் சேவை மறுபடியும் பழையபடி தொடங்கி நடந்து வருகிறது..

3வது ரயில் சேவை
அதேபோல, கொல்கத்தா - டாக்கா இடையிலான மைத்ரி விரைவு ரெயில் சேவையும் 2 வருட காலத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது.. இந்நிலையில், இந்தியா-வங்காளதேசம் இடையிலான ரெயில் இணைப்பை அதிகரிக்கும்விதமாக, மேலும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க 2 நாட்டு ரயில்வே நிர்வாகமும் முடிவு செய்தது.. எனவே, இன்றைய தினம், அதாவது ஜுன் 1-ந் தேதி முதல் மேற்கு வங்காளத்தின் புது ஜல்பைல்குரியில் இருந்து டாக்காவுக்கு மித்தாலி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டது.

கொடியசைத்து துவக்கம்
அதன்படி, இந்தியா-வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரெயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.. சிலிகுரி, இந்தோ-வங்காளதேச ரயில் சேவை, "மிதாலி எக்ஸ்பிரஸ்", இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து டாக்காவிற்கு இன்று முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது... டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து, 2 நாட்டு ரயில்வே அமைச்சர்களும் இதற்காக கொடியசைத்து இன்று தொடங்கி வைக்க போகிறார்கள்.

எக்ஸ்பிரஸ் ரயில்
இது மூன்றாவது இந்திய-வங்காளதேச ரெயில் சேவை என்ற பெருமையை சேர்க்கிறது.. நியூ ஜல்பைகுரி-டாக்கா கண்டோன்மென்ட் ரயில், எண் 13132, வாரத்தில் 2 நாட்கள், அதாவது, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும் மற்றும் திரும்பும் பயணத்திற்கு, ரயில் எண் 13131, டாக்கா கண்டோன்மென்ட்-புதிய ஜல்பைகுரி, மிதாலி எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் அன்றும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி கோச்கள்
அதேபோல, இந்த ரயில் நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா இடையே 513 கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது மணி நேரத்தில் கடக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 4 ஏசி கேபின் கோச்சுகள் மற்றும் 4 ஏசி நாற்காலி இருக்கையுடன், டீசல் இன்ஜின் மூலம் இந்த ரயில்சேவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.. எனவே, இரு நாட்டு பயணிகளுக்கும் இந்த ரயில், வரப்பிரசாதமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications