தோல்விக்கு பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.. ராஜினாமா ஏன்? ராகுல் காந்தி பரபரப்பு விளக்கம்
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப்போனதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து டுவிட்டரில் நீண்ட விளக்கமும் ராகுல் காந்தி அளித்துள்ளார். அதில் அவர், காங்கிரஸ் கட்சியின் செயல்களும் , லட்சியங்களும் நமது அழகான தேசத்தின் உயிர்நாடிய விளக்கிய நிலையில், அதற்காக சேவை செய்வது பாக்கியம். இந்த வாய்ப்பை வழங்கிய நாட்டிற்கும், எனது கட்சிக்கும் கடமைபட்டு இருக்கிறேன்.

ராகுல் காந்தி விளக்கம்
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எங்கள் கட்சியின் எதிர்கால வளரச்சிக்கு பொறுப்புடைமை என்பது முக்கியமானது. எனவே இந்த காரணத்தால் தான் நான் ராஜினாமா செய்துள்ளேன்.

புதிய தலைவர் தேர்வு
என்னுடன் பணியாற்றி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள், அடுத்த காங்கிரஸ் தலைவரை பரிந்துரைக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஆனால் கட்சியை அடுத்து வழிநடத்தும் புதிய தலைவரை நான் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது.

கடினமான நடவடிக்கைகள்
காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் தோல்விக்கு மேலும் பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எதிர்கால காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு எனது ராஜினாமா முக்கிய பங்காற்றும் என கருதுகிறேன். காங்கிரஸ் காரிய கமிட்டிக்குழு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்" இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் சமதானம்
முன்னதாக லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். அவரை சமாதானம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் முயன்றனர். எனினும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
|
காங்.தலைவர் அல்ல
இப்போது ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் என்ற அடையாளத்தை எடுத்துவிட்டு, காங்கிரஸ் உறுப்பினர் என மாற்றி உள்ளார். சாதாரண தொண்டனாக மாறி சேவை ஆற்றும் முடிவுக்கு ராகுல் வந்துவிட்டதை காங்கிரசில் உள்ள பலராலும் தற்போது தாங்கி கொள்ள முடியவில்லை
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications