தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? இன்று முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு இன்று முடிவெடுக்கவுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

+2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மே 4ம் தேதி முதல் 21ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் +2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள். சுகாதாரத் துறை வல்லுநர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முக்கிய ஆலோசனை
இருப்பினும், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து முடிவு செய்ய இன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை, உள் துறை வருவாய் துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் +2 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்
முன்னதாக, கொரோனாோ பாதிப்பு அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்தது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 10ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,970 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாநிலத்தில் 54,315 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications