இன்று என்ன நாள் தெரியுமா? மொத்த இந்தியர்களுக்கும் ஷாக் தந்த பிரதமர் மோடி! 7 ஆண்டு ஆயிடுச்சாமே! ஆஹா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று 2013 நவம்பர் 8 ம் நாள்.. பலருக்கும் இன்றைய தினம் பிற நாட்களை போல் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இந்தியரால் மறக்க முடியாத ஒரு நவம்பர் 8 ம் தேதி உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது என்னவென்று கேட்டால் நீங்கள் ஒரு 7 ஆண்டு பின்நோக்கி செல்ல வேண்டும்.

ஆம், 2016 நவம்பர் 8 ம் தேதியை தான் கூறுகிறோம். அன்றைய தினம் காலையில் மக்கள் அனைவரும் எழுந்து தங்களின் பணிகளுக்கு சென்றனர். மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

Today marks the seventh anniversary of PM Modis Demonetisation 2016 for Rs. 500 and Rs 1000 note

மாலையில் வீடு திரும்பிய அவர்கள் உழைத்த மற்றும் படித்த களைப்பில் கொஞ்சம் டிவியை பார்த்து ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தபோது தான் வந்தது ஒரு அறிவிப்பு.

அதாவது பிரதமர் நரேந்திர மோடி இரவு 8.15 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற போகிறார் என்ற தகவல் திடீரென வேகமாக பரவியது. பலருக்கும் இது புரியாத புதிராக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம், குடியரசு தினத்தை போல் உரையை நிகழ்த்துவார் என சிலர் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு இருந்தது. அதோடு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு என்பது ஒரு நொடியில் ஒட்டுமொத்த இந்தியர்களையும் திகைக்க வைத்துவிட்டது என்றே கூறலாம்.

ஆம், 2016 நவம்பர் 8 தான் இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளாகும். அதாவது நாட்டில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கூறிய தினமாகும். இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டு இன்றுடன் 7 வது ஆண்டு ஆகிறது. அன்றைய தினம் அதாவது 2016 நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூறியதாவது:

‛‛தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடனும், புதிய நம்பிக்கை உடனும் கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்று சில முக்கியமான பிரச்சினைகள் மற்றும் முக்கியமான முடிவுகளைப் பற்றி நான் உங்களிடம் பேசுவேன். மேலும் ஒரு வேண்டுகோள் ஒன்றையும் வைக்க விரும்புகிறேன். 2014ல் நீங்கள் என்னிடம் கடினமான பொறுப்பை ஒப்படைத்தனர்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே 125 கோடி இந்தியர்களின் ஆதரவுடன் உலக பொருளாதாரத்தில் இந்தியா நல்ல நிலையை தற்போது எட்டியுள்ளது. இதை நான் சொல்லவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியே தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ஒரு நாட்டின் வளர்ச்சி மீது தீர்க்கமான நடவடிக்கை தேவை.

ஊழல் மற்றும் கருப்பு பண குவியலை உடைக்க வேண்டும். இதனால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டில் இருக்காது. இந்த நோட்டுகளின் சட்டபூர்வமான டெண்டர் இனி இருக்காது'' என்றார். இதன்மூலம் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அவர் அறிவித்தார். அன்றைய தினம் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 85 சதவீதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகளாக இருந்த நிலையில் அதனை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த தினம் தான் இன்று.

இதையடுத்து மக்கள் வங்கி வாசலில் நீண்டநேரம் காத்திருந்து தங்களிடம் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மாற்றினர். அதன்பிறகு குறிப்பிட்ட காலஅவகாசத்துக்கு பிறகு பிரதமர் மோடி செல்லாது என அறிவித்தப்படி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் முற்றிலுமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. இந்தியாவில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததன் 7 வது ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும். அதன்பிறகு இந்தியாவில் ரூ.2000 நோட்டு மற்றும் புதிய ரூ.500 நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. மேலும் தற்போது ரூ.2000 ரூபாய் நோட்டும் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+