'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி!
டெல்லி: வெங்காயத்தின் விலையை தொடர்ந்து தக்காளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. டெல்லியில் தக்காளி விலை ரூ.80க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள மாநிலங்களான மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தலைநகர் டெல்லிக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.45க்கு விற்கப்பட்ட தக்காளி விலை பின்னர் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது தக்காளி விலை 80க்கு விற்கப்படுகிறது. இதனால் டெல்லி மக்கள் தக்காளி இல்லாமல் எப்படி சமையல் செய்வது என்று வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த விஷயத்தில மத்திய அரசு தலையிட்டது. அரசின் கடைகள் மூலம் தக்காளிக்கு பதில் தக்காளி கூல் பாக்கெட்டுகளை விற்க உத்தரவிட்டது. இதன்படி 200 கிராம் (800 கிராம் புதிய தக்காளிக்கு சமம்) தக்காளி கூழ் ரூ.25-க்கு விற்கப்படுகிறது. இதைப்போல 825 கிராம் கூழ் (2.5 கிலோ தக்காளிக்கு சமம்) ரூ.85-க்கும் விற்பனையாகிறது. ஆனால் சுவை சிறப்பாக இருக்காது என்று கருதி இதனை வாங்க மக்கள் யாரும் முன்வருவதில்லை.
தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில இருந்து அதிக அளவு தக்காளி டெல்லிக்கு வந்தால் மட்டுமே பிரச்சனை சரியாகும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். ஆனால் தமிழகத்தில் தக்காளி விலை பெரிய அளவில் உயரவில்லை. இங்கு ஒரு கிலோ தக்காளி இங்கு ரூ.10 அல்லது ரூ.20 என்ற அளவில் தான் விற்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications