டெல்லியை அதிர வைக்க காத்திருக்கும் 'டிராக்டர் பேரணி' - மாஸ் காட்டும் விவசாயிகள்
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கவுள்ள டிராக்டர் பேரணி தங்களின் அரசியலமைப்பு உரிமை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளன. ஆனால் தீர்வு மட்டும் எட்டப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி குடியரசு தின அணிவகுப்பு நடக்கும்போது, விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி டெல்லியில் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி போலீஸார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில் நேற்று (ஜன.18) நடந்த விசாரணையின் போது, 'குடியரசு தினத்தன்று விவசாயிகள் அறிவித்திருக்கும் டிராக்டர் பேரணி 'சட்டம் ஒழுங்கு' தொடர்பான ஒன்று. எனவே, தேசிய தலைநகருக்குள் யார் யார் நுழைய வேண்டும் என்பதை டெல்லி போலீஸ் தான் முடிவெடுக்க முடியும்' என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்தது.
இந்நிலையில், டிராக்டர் பேரணி நடத்துவது தங்களின் அரசியலமைப்பு உரிமை என்று விவசாயிகள் சங்கம் உறுதிபட தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குல் ஹிந்த் கிசான் கூட்டமைப்பின் பஞ்சாப் பிரிவின் தலைவர் பிரேம் சிங் பாங்கு, "நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இது ஒரு அமைதியான பேரணி என்பதை அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 10வது சுற்று பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் குழுவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம்.
திக்ரி, சிங்கு, காஸிபூர், ஷாஜகான்பூர் மற்றும் பல்வால் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே புறவழிச்சாலையில் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் டிராக்டர் அணிவகுப்பு நடக்கும்.
ராஜஸ்தானிலிருந்து விவசாயிகளும் வர தயாராக இருக்கிறார்கள், அதே நேரத்தில் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து அணிவகுப்புக்காக டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பேரணிக்கான பாதை குறித்து விவாதிக்கப்படும். எங்கள் தொண்டர்கள் போக்குவரத்தை நிர்வகிப்பார்கள், அதேபோல் ஒழுக்கமாகவும் நடந்து கொள்வார்கள்" என்றார்.
பிகேயு தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹன் கூறுகையில், "டெல்லியில் அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எங்களுக்கு உரிமை இருக்கிறது.
ஒருவேளை பேரணி நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருந்தால், டெல்லி போலீஸாருடன் அமர்ந்து பேசி, மாற்று வழியில் பேரணி செல்ல அனுமதி கேட்போம். ஆனால், 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடந்தே தீரும்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
அதேபோல், மற்றொரு பிகேயு தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில் கூறுகையில், "நாங்கள் யாருக்கும் எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்த இங்கு வரவில்லை. சட்டங்களை ரத்து செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
குடியரசு தினம் என்பது நமது அரசியலமைப்பு உரிமைகளின் கொண்டாட்டமாகும். டிராக்டர் அணிவகுப்பு நடத்துவதை அவர்கள் தடுத்தால், அது எங்கள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications