ஜனவரி 30ம் தேதி நாடு முழுக்க உண்ணாவிரதம், பொதுக்கூட்டங்கள்.. விவசாய சங்கங்கள் அறிவிப்பு
டெல்லி: மத்திய பட்ஜெட் தினத்தன்று நாடாளுமன்றத்தை நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணியை ஒத்தி வைப்பதாக சில விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதற்கு பதில் ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினத்தில் நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறும்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 400 போலீசார் காயமடைந்தனர். செங்கோட்டையில் விவசாய கொடிகள் ஏற்றப்பட்டன. டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார்.

இதுபோன்ற சம்பவங்களால் ஏற்கனவே அறிவித்தபடி, பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை சில விவசாய சங்கங்கள் ஒத்தி வைத்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான தர்ஷன் பால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாத்மா காந்தியின் நினைவு தினமான வருகிற 30-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறையில் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம் சுமத்திய அவர், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரச்சினைக்கு காரணமான நடிகர் தீப் சிங் சித்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைக்கூலி என்றும் அவர் கூறினார். வன்முறையைத் தொடர்ந்து செங்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்து. அதற்கான காரணம் என்னவென்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவிக்கவில்லை.
இதனிடையே, டெல்லியின் எல்லையில் நடந்த போராட்டங்களில் இருந்து பாரதிய கிசான் யூனியன் (பானு) மற்றும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு விலகியுள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், "செங்கோட்டை சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், அதன் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications