ஜனவரி 30ம் தேதி நாடு முழுக்க உண்ணாவிரதம், பொதுக்கூட்டங்கள்.. விவசாய சங்கங்கள் அறிவிப்பு
டெல்லி: மத்திய பட்ஜெட் தினத்தன்று நாடாளுமன்றத்தை நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணியை ஒத்தி வைப்பதாக சில விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதற்கு பதில் ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினத்தில் நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறும்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 400 போலீசார் காயமடைந்தனர். செங்கோட்டையில் விவசாய கொடிகள் ஏற்றப்பட்டன. டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார்.

இதுபோன்ற சம்பவங்களால் ஏற்கனவே அறிவித்தபடி, பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை சில விவசாய சங்கங்கள் ஒத்தி வைத்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான தர்ஷன் பால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாத்மா காந்தியின் நினைவு தினமான வருகிற 30-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறையில் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம் சுமத்திய அவர், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரச்சினைக்கு காரணமான நடிகர் தீப் சிங் சித்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைக்கூலி என்றும் அவர் கூறினார். வன்முறையைத் தொடர்ந்து செங்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்து. அதற்கான காரணம் என்னவென்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவிக்கவில்லை.
இதனிடையே, டெல்லியின் எல்லையில் நடந்த போராட்டங்களில் இருந்து பாரதிய கிசான் யூனியன் (பானு) மற்றும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு விலகியுள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், "செங்கோட்டை சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், அதன் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications