பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா?
இன்று காலை நடக்கிறது மத்திய அமைச்சரவை கூட்டம்
டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பேராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.. விவசாயிகளுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.. ஆனால், இவை எல்லாமே தோல்வியில் முடிந்துவிட்டது.. மற்றொருபுறம் இவர்களின் போராட்டம் தீவிரமடைந்தும் வருகிறது.
ஒருபக்கம் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் திரண்டு வருகின்றனர்.. மற்றொரு பக்கம், டெல்லியை அடையும் சாலைகளையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்தும் வேளாண் சட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.. அதுமட்டுமல்ல, கொரோனா தடுப்பூசி விநியோகம், 4ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11.25 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதுமட்டுமல்ல, குஜராத்தில் நேற்று பிரதமர் பேசும்போது, கடந்த காலங்களில் விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிசகளும் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே புதிய வேளாண் திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.. அத்துடன் விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications