“ஓகே” சொல்லிட்டாங்க.. பெட்ரோல், டீசல் விலை குறையுதா? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கொடுத்த “அப்டேட்”
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து விளக்கமளித்து இருக்கிறார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே கடுமையாக உயர்வை சந்தித்து தற்போது ரூ.100 முதல் ரூ.110 அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக விலை மாற்றமின்றி தொடர்ந்து வந்தது.
அதே நேரம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கவனித்து வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை நிலையாக இருந்து, அடுத்த காலாண்டு எண்ணெய் நிறுவனங்கள் நிலையும் சரியாக இருந்தால் இந்த சிக்கலை கவனிக்கும்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் இடத்தில் நான் இல்லை. நாங்கள் அவர்களுடன் பயணிக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அடுத்த காலாண்டில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளன. அவர்கள் மேலும் சில இழப்புகளை ஈடுகட்டி இருக்கிறார்கள்.

அவர்கள் சிறந்த கார்ப்பரேட் குடிமகன்களாக உள்ளார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் பயணித்து வருகிறோம். நுகர்வோர்கள் எந்த விதமான சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்." என்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் இன்று உயர்ந்தது.
அதே நேரம் இந்த விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. விலை மாற்றமின்றி தொடர்ந்து வந்தாலும், தற்போது இருக்கும் அதிக விலை எப்போது குறையும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications