அன்லாக் 4.0.. சினிமா தியேட்டர்களுக்கு இந்த முறையும் அனுமதி கிடையாது.. செப். 30 வரை தடை நீட்டிப்பு!
டெல்லி: அன்லாக் 4.0 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா தியேட்டர்களுக்கான தடை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் சராசரி கொரோனா கேஸ்கள் 70 ஆயிரத்தை தாண்டி அதிகரித்து வருகிறது. மொத்த கொரோனா பாதிப்பு 35 லட்சத்தை தாண்டி உள்ளது.

இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க கொரோனா அன்லாக் 4.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் ஆகஸ்ட் 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது. லாக்டவுன் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 31 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாடு முழுக்க சினிமா தியேட்டர்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 வரை சினிமா தியேட்டர்கள் செயல்படாது. சினிமா ஹால், நீச்சல் குளம் செயல்படாது.
திறந்த வெளி கூடங்கள் மட்டும் செப்டம்பர் 21ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications