50 குழந்தைகள் நாசம்.. ஆபாச வீடியோ விற்பனை.. உ.பி.யை அதிர வைத்த அரசு இன்ஜினியர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை ஜூனியர் நிலையிலான இன்ஜினியர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து படம் பிடித்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் சித்ரகூடம், பண்டா மற்றும் ஹமிபூர் ஆகிய 3 மாவட்டங்களில், இந்த மிருகத்தனமான இன்ஜினியர் சிறுமிகளை வேட்டையாடியுள்ளார்.

UP junior engineer in CBI net for alleged sexual abuse of children

5 வயது குழந்தை முதல் 16 வயது டீனேஜ் குழந்தை வரை இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் சுமார் 50 குழந்தைகளை நாசம் செய்துள்ளார் அந்த இன்ஜினியர். கடந்த 10 வருடங்களாக இதே வேலையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த சிபிஐ அவரை கைது செய்துள்ளது. இன்ஜினியர் வீட்டில் காவல்துறை ரெய்டு நடத்தியபோது 8 செல்போன்கள், 8 லட்சம் பணம், செக்ஸ் பொம்மைகள், லேப்டாப், குழந்தைகள் பலாத்காரம் தொடர்பான உபகரணங்கள் பல கிடைத்துள்ளன.

குழந்தைகளை பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து, சில வெப்சைட்களில் விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார் இந்த கயவன். இதுவரை இன்ஜினியரின் பெயர் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த குற்றச் செயலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா என சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+