UPSC: யுபிஎஸ்சி புதிய தலைவராக அஜய் குமார் நியமனம்.. யார் இந்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி?
டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அந்த இடத்திற்கு அஜய் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் குரூப் 1 மற்றும் குரூப் 2 உள்ளிட்ட பிற தேர்வுகளையும் யுபிஎஸ்சி மேற்கொண்டு வருகிறது. இந்த யுபிஎஸ்சி தேர்வாணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள் இருப்பர்.

யுபிஎஸ்சி ஆணையத்திற்கு 2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்த மனோஜ் சோனி. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சோனி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஆனால் 2023ஆம் ஆண்டு சொந்த காரணங்களுக்கான திடீரென பதவியை ராஜினாமா செய்து விலகி கொண்டார்.
மனோஜ் சோனி 2029ஆம் ஆண்டு வரை யுபிஎஸ்சி தலைவராக நீடிக்க வாய்ப்பு இருந்த சூழலில், அவரின் ராஜினாமா பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. இவர் ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, மகாராஷ்டிரா பயிற்சி ஐஏஎஸ்-ஆக இருந்த பூஜா கேத்கரின் விவகாரம் எழுந்து மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதன்பின் யுபிஎஸ்சி தலைவராக 2024 ஜூலை மாதம் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டார்.
இவரின் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது யுபிஎஸ்சி புதிய தலைவராக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இவர் 2019 ஆகஸ்ட் முதல் 2022 அக்டோபர் மாதம் வரை பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்து வந்துள்ளார்.
1983ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியான அஜய் குமார், கேரளா மாநிலத்தில் ஐடி மற்றும் மாநில மின்னணு மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட துறைகளின் செயலாளராகவும் இருந்தவர். தற்போது யுபிஎஸ்சி தலைவராஜ அஜய் குமார் பதவிக் காலம், அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications