அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்!
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, வெளிநாடுகளுடான உறவை வலுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அண்மையில் மாலத்தீவு, இலங்கை, கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கிர்கிஸ்தான் சென்றபோது, சீன அதிபர் ஜிங்பிங் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இது ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது.
பிற நாடுகளுடனும் நெருக்கமான உறவை பேணுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ வரும் 25ந் தேதி முதல் 27ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த சுற்றுப் பயணத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. மேலும், இந்திய பொருட்கள் மீது கடுமையான வரி விதிப்பு முறைகளை அமலுக்கு கொண்டு வருவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் வருகை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் நடக்க இருக்கும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications