அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்!
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, வெளிநாடுகளுடான உறவை வலுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அண்மையில் மாலத்தீவு, இலங்கை, கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கிர்கிஸ்தான் சென்றபோது, சீன அதிபர் ஜிங்பிங் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இது ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது.
பிற நாடுகளுடனும் நெருக்கமான உறவை பேணுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ வரும் 25ந் தேதி முதல் 27ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த சுற்றுப் பயணத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. மேலும், இந்திய பொருட்கள் மீது கடுமையான வரி விதிப்பு முறைகளை அமலுக்கு கொண்டு வருவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் வருகை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் நடக்க இருக்கும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
-
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து?












Click it and Unblock the Notifications