கொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: கொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அமைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவரசக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்கள்,முன்களப் பணியாளர்கள் என மூன்று கோடி பேருக்கு முதல்கட்டமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 78,68,42 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சவப்பெட்டியின் கடைசி ஆணி
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அமைந்துள்ளது. இருப்பினும், சிலர் அரசியல் காரணங்களுக்காகத் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இது மத்திய அரசுக்கு வேதனை அளிக்கிறது.

தயக்கம் தேவையில்லை
இவர்கள் செய்யும் இந்த செயல்கள் காரணமாக சமூகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்குத் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தயக்கம் ஏற்படுகிறது. இப்படி தயக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, அதன் பின்னர் பிரச்னைகளை சந்திக்க அரசு விரும்பவில்லை. நமது மருத்துவர்களைப் போலவே அனைவருக்கும் கொரோனா தொற்றிலிருந்து உரியப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

பக்கவிளைவுகள் இயல்பு
நமது கொரோனா தடுப்பூசி மிக மிகப் பாதுகாப்பானது. இதில் மக்கள் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின் தலைவலி போல சில பக்க விளைவுகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். இது மிகவும் இயல்பான ஒன்று. எந்தத் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் இது போன்ற பக்கவிளைவுகள் நிச்சயம் ஏற்படும்" என்றார்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பிரதமர்
முதல்கட்டமாக மூன்று கோடி பேருக்குத் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர், அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்தவர்கள், குறைவான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள், மருத்துவ பிரச்னை உடையவர்கள் என மொத்தம் 27 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications