பாத்திமா லத்தீப் மரணம்... உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக... அமைச்சரிடம் திருமா மனு
டெல்லி: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து திருமாவளவன் எம்.பி.மனு அளித்துள்ளார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற அந்தச் சந்திப்பின் போது ஐஐடியில் தொடரும் தற்கொலைகள் பற்றியும், அங்கு ஏற்பட்டிருக்கும் சாதிய பாகுபாடு பற்றியும் திருமாவளவன் விரிவாக மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
திருமாவளவனின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

பெரும் தாக்கம்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தமிழக மக்களிடையே அதுவும் குறிப்பாக கல்வியாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. பாத்திமாவை தற்கொலைக்கு தூண்டிய 3 பேராசியர்கள் மீது கடும் நடவடிக்கை கோரி அவருடைய தந்தை அப்துல் லத்தீப் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், டிஜிபி திரிபாதி ஆகியோரை நேரில் சந்தித்து கேட்டுக்கோண்டார்.

அரசியல் தலைவர்கள்
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், அறிக்கைகள் காரணமாக, பாத்திமா லத்தீப் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

உயர்மட்ட விசாரணை
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்த திருமாவளவன் எம்.பி., பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மாணவி அலைபேசியில் குறிப்பிட்டிருந்த பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதோடு அது தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தார்.

உளவியல் நிபுணர்
மேலும், ஐஐடி மாணவர்களுக்கு உளவியல் நிபுணர்களை கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் எனவும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். அது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்துள்ளார்.
-
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications