செப்டம்பர் 9ல் துணை குடியரசு தலைவர் தேர்தல்.. ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து அறிவிப்பு
டெல்லி: செப்டம்பர் 9ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதற்கிடையே செப்டம்பர் 9ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். செப். 9ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக தரப்பிற்கு தேவையான பலம் இருப்பதால் அவர்களின் வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications