புல்வாமா தாக்குதலின் போது தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன்? பிரதமர் மோடி பரபரப்பு விளக்கம்!
புல்வாமா தாக்குதல் நடந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: புல்வாமா தாக்குதல் நடந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்து இருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி தேர்தலை முன்னிட்டு தற்போது ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து உள்ளார். காங்கிரஸ், ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதல், 5 வருட பாஜக ஆட்சி என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இவர் இதில் பேசி இருக்கிறார்.
பிரதமர் மோடி கடந்த 5 வருடங்களில் ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை. ஆனால் அதற்கு பதிலாக தற்போது பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து உள்ளார்.

மோடி பேட்டி
பிரதமர் மோடி தனது பேட்டியில், தீவிரவாதத்திற்கு துணை போவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். புல்வாமா தாக்குதலை மிகவும் கவனமாக எதிர்கொண்டோம். தாக்குதல் அடுத்து தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி இருந்தால் பெரிய பிரச்சனையாகி இருக்கும். பிரச்சாரத்தை நிறுத்துவது மக்கள் இடையே பெரிய பதட்டத்தை ஏற்படுத்தும். அதனால்தான் புல்வாமா தாக்குதலின் போது திட்டமிடப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை.

இந்தியா பாதுகாப்பு
பிரியங்கா காந்தி குறித்த கேள்விக்கு, தேர்தலில் யார் நினைத்தாலும் நிற்கலாம்: அது அவர்களின் விருப்பம். பிரியங்கா காந்தியின் அரசியல் வருகையால் எங்களுக்கு அச்சம் இல்லை. இதெல்லாம் எனக்கு பெரிய பிரச்சனை கிடையாது. இந்தியாவின் பாதுகாப்பை கெடுக்கும் வகையில் காங். தேர்தல் அறிக்கை உள்ளது.

காங்கிரஸ் எப்படி
காங்கிரஸ் கட்சியிடம் நல்ல தலைவர் கூட இல்லை. 125 வருட பழமையான கட்சி தலைவர் இல்லாமல் தவிக்கிறது. எங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகளை காந்தி குடும்பம் வைக்கிறது. காந்தி குடும்பத்தால் ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க முடியுமா?.

கூட்டணி
கட்சிகள் ஒன்றாக இணைவதால் மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியால் எதுவும் மாற்றம் ஏற்படாது. நான் மக்களுடன் இருக்கிறேன். அவர்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சேர்வதால் எந்த மாற்றமும் ஏற்படாது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications