எதிர்க்கட்சி வரிசையில் அமரும் இந்தியா கூட்டணி? ஆலோசனைக்கு பின் கார்கே பரபரப்பு பேச்சு
டெல்லி: டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகு மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நேரம் வரும் போது பாஜக அரசை அகற்ற முயற்சி எடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
நமது நாட்டில் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இதில், பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

மொத்தம் 543 சீட்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சியும் 272 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 சீட்களிலும், ஜேடியு 12 சீட்களிலும், ஷிண்டே சிவசேனா 6 சீட்களிலும் வென்றன.
எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிய நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாகவே இருந்தது. 400+ இடங்கள் என்று சொல்லித் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவுக்கும் மிகப் பெரிய ஷாக் காத்திருந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் கை ஓங்கியது.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டி ஆர் பாலு, சரத்பவார், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:- பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியா கூட்டணி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளுக்காக தொடர்ந்து போராடும்.
மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நேரம் வரும் போது பாஜக அரசை அகற்ற முயற்சி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் ராகுல் காந்தி கூறுகையில், "இந்தியா கூட்டணியின் குரல் மக்களின் குரல் என்பதை தேர்தல் முடிவு தெளிவாக்கியுள்ளது. இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து பாஜகவின் மக்கள் விரோத போக்கை எதிர்ப்போம்" என்றார்.
-
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications