இந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் கதவும் தட்டப்படும்.. இந்த 9 கேள்விகள் கேட்கப்படும்.. மத்திய அரசு
டெல்லி: ஒவ்வொரு இந்தியர் வீட்டின் கதவும் தட்டப்படும், கீழ்கண்ட 9 கேள்விகள் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பில் கேட்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 2021 கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை,
இந்நிலையில் கொரோனா பிரச்சனை முடிந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்தியஅரசு முடிவு செய்தள்ளது.

இந்த கணக்கெடுப்பு எலக்ட்ரானிக் முறையில் மக்கள் தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு குடிமகனிடமும் கேட்கப்பட உள்ள பல்வேறு கேள்விகள் குறித்த தகவலை இந்திய சென்செஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
6 மாதங்கள் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்பட உள்ளது. இந்து , முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதம், ஜைணம் என 6 மதத்தில் எதாவது ஒன்றை குறிப்பிடும் வகையில் மக்கள் தொகை படிவம் உள்ளது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள இயற்கை வழிபாடும் செய்யும் மக்கள், தங்களின் சரணப்பிரிவை தனி மதமாக வகைப்படுத்த பல வருடங்களாக போராடி வருகிறார்கள். கர்நாடகாவில் லிங்காயத் பிரிவினரும் இதே கோரிக்கையை கோரி வருகிறார்கள்.

வாடகை வீட்டில வசிப்பவரா , சொந்த வீடு உள்ளதா என்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவீர்களா, சமையல் எரிவாயு சிலிண்டர், குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை உயர் அழுத்த குழாய்களில் பயன்படுத்துவீர்களா என்று கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
உங்கள் வீட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் உள்ளன. டிடிஹெச் இணைப்புகள் எத்தனை உள்ளன. பணியிடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் பயன்படுத்துகிறீர்களா, தினசரி பணி நேரத்தில் பயணத்திற்கு எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications