"மூன்றே வார்த்தை!" கோயிலை தூய்மை செய்த பின்.. பார்வையாளர்கள் ஏட்டில் பிரதமர் எழுதியது என்ன தெரியுமா
டெல்லி: பிரதமர் மோடி காலாராம் கோயிலுக்குச் சென்று நேற்று பூஜை செய்த நிலையில், இது தொடர்பாக மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22இல் நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரமே விழாவுக்கு உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாடு முழுக்க உள்ள பயணிகள் இங்கே எளிதாக வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
பிரதமர் மோடி: இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை கோதாவரி நதிக் கரைக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் அங்கே உள்ள கோதாவரி பஞ்சகோடி புரோகித் சங்க அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதிய விஷயம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிராவிற்குச் சென்றிருந்தார். அங்கே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து கோதாவரி நதி கரையோரம் அமைந்துள்ள புகழ்பெற்ற காலாராம் கோவிலுக்கும் சென்றார். இந்த கோயில் வளாகத்தைத் தான் பிரமதர் மோடி நேற்று சுத்தம் செய்திருந்தார்.
ஜெய் ஸ்ரீ ராம்: இதற்கிடையே அந்த கோயில் வாளகத்தில் அவர் எழுதிய விஷயம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பார்வையாளர்கள் ஏட்டில் "ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதியுள்ளார். அவர் "ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதிய ஃபோட்டோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
இது குறித்து அகில பாரதிய அமைப்பின் மூத்த துணைத் தலைவர் சதீஷ் சுக்லா கூறுகையில், "இந்த இடத்திற்கு வந்து 'கங்கா பூஜை' செய்யும் முதல் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார். அவர் "ஜெய் ஸ்ரீ ராம்' என்று பார்வையாளர் புத்தகத்தில் எழுதிச் சென்றார்.. பிரதமர் ஆற்றங்கரையில் உள்ள புனிதமான ராமர் குடிலுக்குக்குள் நுழைந்து இங்கே பூஜை செய்தார்.

வேண்டுதல் என்ன: பிரதமர் மோடி சமஸ்கிருதத்தில் மந்திரம் செய்தார். அவர் எப்போதும் பாரத மாதாவுக்கு சேவை செய்வேன், மேலும் இந்தியாவை உயர் நிலைக்குக் கொண்டு செல்ல அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வலிமை தருமாறு பிரார்த்தனை செய்தார். மேலும் விவசாயத்தை நம்பி இருக்கும் இந்த நாட்டிற்குத் தேவையான மழையைத் தருமாறும் அவர் வேண்டினார்" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி நேற்றைய தினம் இந்த காலாராம் கோயிலுக்குச் சென்று சுத்தப்படுத்தினார். கோயில் வளாகத்தை மாப் போட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தினார். அந்த வீடியோ இணையத்தில் நேற்று டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications