மோடி 3.o அமைச்சரவை.. நாட்டின் இளம் அமைச்சர் முதல் பணக்கார அமைச்சர் வரை.. ஆந்திராவில் இருந்து 3 பேர்!
டெல்லி: இன்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் ஆந்திராவில் இருந்து 3 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். அவருடன் என்டிஏ தலைமையிலான மூன்றாவது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் மொத்தம் மூன்று பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். அங்குள்ள தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து இருவரும், பாஜக எம்பி ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ராம்மோகன் நாயுடு: தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் எம்பியாக தேர்வாகி இருப்பவர் ராம்மோகன் நாயுடு.. மோடி அமைச்சரவையில் உள்ள இளம் மத்திய அமைச்சராக இவர் இருக்கிறார். 36 வயதான இவர் லோக்சபா தேர்தலில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
ஸ்ரீகாகுளம் தொகுதியில் கடந்த 2014இல் ராம்மோகன் நாயுடு முதலில் தனது 26 வயதில் எம்பியாக தேர்வானார். இப்போது 3ஆவது முறையாகத் தொடர்ந்து அங்கிருந்து இவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது சந்தை தந்தை, மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் யெர்ரான் நாயுடு..
1996இல் தேவகவுடா ஆட்சி அமைத்த போது யெர்ரான் நாயுடு தனது 39 வயதில் மத்திய அமைச்சராகப் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தேவகவுடா மற்றும் ஐ.கே குஜரால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.
சந்திரசேகர்: அடுத்து லிஸ்டில் இருப்பவர் குண்டூரில் இருந்து முதல்முறையாக எம்.பி.யாக தேர்வாகி இருக்கும் சந்திரசேகர் பெம்மாசானி.. 48 வயது மருத்துவரான இவர் குண்டூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்ற கோடீஸ்வர வேட்பாளர்களில் இவரும் ஒருவர். இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 5,700 கோடி என்று இவர் பிரமாண பத்திரத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பூபதி ராஜு சீனிவாச வர்மா: ஆந்திர மாநில பாஜக எம்பி பூபதி ராஜு சீனிவாச வர்மாவும் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். நர்சபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சீனிவாச வர்மா இந்த முறை லோக்சபா தேர்தலில் 2.76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆந்திராவில் பாஜக சார்பில் மொத்தமே மூன்று எம்பிக்கள் மட்டுமே வென்றிருந்த நிலையில், அதில் பூபதி ராஜு சீனிவாச வர்மாவும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications