டெல்லியில் வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்! பகீர் தகவல்
டெல்லி: டெல்லியில் வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1359 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த காலகட்டத்தில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததுள்ளது. இதுமட்டுமல்லாது சவுதி, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இது போன்ற கூட்டம் மலேசியாவிலும் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களுள் 50 சதவீதம் பேர் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த தப்லீகீ அமைப்பானது 180- முதல் 200 நாடுகளில் காணப்படுகிறது. இந்த கூட்டத்தில் 1900 இந்தியர்கள் கலந்து கொண்டிருப்பர் என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளம். அதாவது தமிழகத்திலிருந்து 501 பேர் கலந்து கொண்டனர். அஸ்ஸாமிலிருந்து 216 பேரும், உத்தரப்பிரதேசத்திலிருந்து 156 பேரும், மகாராஷ்டிராவிலிருந்து 109 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 107 பேரும் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் பீகாரில் இருந்து 86 பேரும், தெலுங்கானாவிலிருந்து 55 பேரும், ஜார்க்கண்டிலிருந்து 46 பேரும், கர்நாடகாவிலிருந்து 45 பேரும், உத்தரகண்ட்டிலிருந்து 34 பேரும், அந்தமானிலிருந்து 21 பேரும், ராஜஸ்தானிலிருந்து 19 பேரும், இமாச்சல பிரதேசம், கேரளா, ஒடிஸாவிலிருந்து தலா 15 பேரும், பஞ்சாபிலிருந்து 9 பேரும், மேகாலயாவிலிருந்து 5 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications