தமிழக தலைமைச் செயலாளராக வேண்டியவர்.. பணமதிப்பிழப்பின் மூளை.. யார் இந்த சக்திகாந்த தாஸ்?
Recommended Video

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக தமிழக ஐஏஎஸ் கேடரை சேர்ந்த சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறையில் மூத்த அனுபவம் கொண்ட இவர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர்.
ஒடிசாவை சேர்ந்த, சக்திகாந்த தாஸ், 1980ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் கேடர் அதிகாரியாகும். வரலாற்று பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சுமார் 40 வருட அரசு பணி அனுபவம் கொண்டவர், சக்திகாந்த தாஸ்.
தமிழ்நாடு தொழில் மற்றும் வருவாய் துறை செயலாளராக பணியாற்றிய சக்திகாந்த தாஸ், பிறகு மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொள்ளப்பட்டார்.
[முன்னாள் தமிழக ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமனம் ]

நிதித்துறை
2008-2013ம் ஆண்டு காலத்தில், மத்திய நிதித்துறை அமைச்சக சிறப்பு செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் இணை செயலாளர் என பதவிகளை வகித்தார். முன்னதாக, செலவீனங்களுக்கான துறை பிறகு பொருளாதார விவகாரத்துறையில் பணியாற்றினார். இவையும் நிதித்துறையின்கீழ் வருபவைதான்.

பொருளாதார விவகாரத்துறை செயலாளர்
பட்ஜெட் தயாரிப்பில் மிகுந்த அனுபவம் பெற்றவரான சக்திகாந்த தாஸ், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் 2015-17ம் ஆண்டு காலகட்டத்தில், பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணி புரிந்ந்தார். இந்த காலகட்டத்தில்தான், பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் காரணமாக பண மதிப்பிழப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

பதவி நீட்டிப்பு
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு அவ்வப்போது மீடியாக்களில் தோன்றி, மக்கள் எப்படி பணத்தை பெறுவது என்பது தொடர்பான பல நெறிமுறைகளை கூறி வந்ததால் இந்தியா முழுவதும் இவரது முகம் பரிட்சையமானது. 2017ம் ஆண்டு, மார்ச் மாதத்தோடு பதவி காலம் நிறைவடைய இருந்த சக்திகாந்த தாஸுக்கு மே 31ம் தேதிவரை பதவி நீட்டிப்பு செய்தது மத்திய அரசு. மே 31ம் தேதியுடன், சக்திகாந்த தாஸ் ஓய்வு பெற்றார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர்
தற்போது இந்தியாவின் நிதி ஆணையக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த சக்திகாந்த தாஸ், ஜி20 மாநாடுகளின் இநதியா சார்பிலான பங்கேற்பாளராகவும் உள்ளார். 63 வயதாகும், சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி ஆளுநராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.

தலைமைச் செயலாளர்
இதில் ஒரு கொசுரு தகவல் என்னவென்றால், தமிழக தலைமை செயலராக இருந்த ராமமோகன்ராவ் அரசியல்வாதிகளுடன் கை கோர்த்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிக்கியதும், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதமே, தமிழக புதிய தலைமைச் செயலாளராக சக்திகாந்த தாஸை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்ததாகவும், ஆனால், அடுத்த ஆண்டே பணி மூப்படைய உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் பதவி வேண்டாம் என்று, அவர் கூறிவிட்டதாக ஒரு தகவல் உண்டு.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications