நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் அதிகாரியாக... சுஷில் சந்திரா பதிவியேற்பு... யார் இவர்?
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா இன்று பதவியேற்றார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் எவ்வித பக்கச்சார்பும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது. அப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ளவருக்குப் பொறுப்புகள் அதிகம்.
நாட்டிலேயே மிக முக்கிய பதவிகளில் ஒன்றாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி கருதப்படுகிறது. இந்தப் பதவியில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மிகக் கூர்மையாக நாடு முழுவதும் கவனிக்கப்படும்.

சுனில் அரோரா
கடந்த இரண்டு ஆண்டுகள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தவர் சுனில் அரோரா. இவரது பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஐந்து மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பின்போதே, இது தொடர்பாக சுனில் அரோரா பேசியிருந்தார். தலைமைத் தேர்தல் அதிகாரியாக இதுதான் தனது கடைசி செய்தியாளர் சந்திப்பு என நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அரோரா, தான் ஓய்வு பெற்றதும் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியேற்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்
சுனில் அரோரா நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே, தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இருப்பினும், தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் கடந்த சில தினங்களாகவே பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்
சுனில் அரோரா நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே, தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இருப்பினும், தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் கடந்த சில தினங்களாகவே பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார்.

யார் இந்த சுஷில் சந்திரா
தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் சுஷில் சந்திரா 1980ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரி ஆவார். இவர் இதற்கு முன், மத்திய நேரடி வரி வாரியத்தின் (சிபிடிடி) தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நாட்டிலுள்ள கறுப்புப் பண முதலைகளைக் கண்டறிய சுஷில் சந்திரா தலைமையின் கீழ், சிபிடிடி கடந்த 2017ஆம் ஆண்டில் "ஆபரேஷன் கிளீன் மனி" என்பதை அறிமுகப்படுத்தியது.

அடுத்தாண்டு வரை
இவர் தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. கடந்த பிப்ரவரி 15, 2019இல் முதல் தேர்தல் ஆணையராகச் செயல்பட்டுவந்த இவர், தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார் என மைஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது

இக்கட்டான சூழ்நிலை
கடந்த சில காலமாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மம்தா தேர்தல் ஆணையம் பாஜகவுக்குச் சாதமாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினர். காங்கிரஸின் ராகுல் காந்தி, வெறும் இரண்டே வார்த்தையில் தேர்தல் 'கமிஷன்' என்று நக்கலாக விமர்சித்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ள இவரது செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications