சரி மோடி மறுபடியும் பிரதமராய்ட்டாரு.. அடுத்த நிதியமைச்சர் பதவி யாருக்கு??
Recommended Video
டெல்லி: மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தால் நிதியமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நிதியமைச்சராக அருண் ஜேட்லி மிகப் பெரிய அதிருப்தியை மக்கள் மத்தியில் பெற்று மோசமான நிதியமைச்சர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். காரணம், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைதான்.
இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமரானால், அடுத்த நிதியமைச்சர் யார் என்ற விவாதம் கிளம்பி விட்டது. இதுதொடர்பாக சில பெயர்கள் அடிபடுகின்றன.

கஷ்ட நிலை
யார் அடுத்த நிதியமைச்சராக வந்தாலும் நிதி நிலையைப் பார்த்து நிச்சயம் மயங்கிப் போய் விடுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே கூறி வருகின்றனர். அந்த நிலையில்தான் நாட்டின் பொருளாதாரம் பெரும் குழப்பமாக உள்ளது.

நிதியமைச்சர் ஜேட்லி
தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அடிப்படையில் ஒரு சட்ட நிபுணர். மோடி அமைச்சரவையில் பல்வேறு பஞ்சாயத்துக்களைத் தீர்த்து வைக்கும் முக்கிய நபராகவும் விளங்குகிறார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் அருண் ஜேட்லி தீவிரமாக செயல்பட்டுள்ளார்.

நல்லா பேசுவாரு
அருண் ஜேட்லி நல்ல பேச்சாளரும் கூட. நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சியினரின் சரமாரி கேள்விகளுக்கு கூலாக பதிலளிக்கக் கூடியவர். ஆனால் ஒரு நிதியமைச்சராக மக்களிடையே பெரும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளார்.

உடல் நலக் கோளாறு
அருண் ஜேட்லிக்கு உடல் நலம் சரியில்லை. மோடி அரசின் கடைசி பட்ஜெட்டைக் கூட இவரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அப்போது அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்துள்ளார். எனவே இவர் மீண்டும் நிதியமைச்சராகும் வாய்ப்பு இல்லை.

கோயல்
அடுத்த நிதியமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் ஜேட்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது 2 முறை இடைக்கால நிதியமைச்சராக இருந்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டையும் கூட இவர்தான் தாக்கல் செய்தார். பியூஷ் கோயல் ஒரு பொருளாதார நிபுணரும் கூட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆப் பரோடாவின் இயக்குநர் குழுவில் இருந்துள்ளார்.

வரியைக் குறைக்க ஆதரவு
அடிப்படையில் ஆடிட்டரான பியூஷ் கோயல், மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்தால் பெருமளவில் வரிகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். குறிப்பாக மாத ஊதியதாரர்களுக்கு வரிகளை பெருமளவில் குறைக்க இவர் ஆதரவாக உள்ளார். பியூஷ் கோயல் வசம் நிதித்துறை ஒப்படைக்கப்படுமானால் நிச்சயம் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
யார் நிதியமைச்சராக வந்தாலும் பணி என்னவோ கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications