"நிச்சயம் பழிவாங்குவோம்.." திடீரென சீனுக்குள் வந்த அல் கொய்தா.. அத்திக் அகமது கொலையில் பரபர அறிக்கை
டெல்லி: பிரபல தாதா அத்திக் அகமது கொலைக்குப் பழிவாங்குவோம் என்று அல்கொய்தா பயங்கரவாதிகள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்தவர் அத்திக் அகமது. 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் இவர் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளது. அவர் ஆள்கடத்தல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே இவரையும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதும் என்பவரையும் போலீசார், கடந்த வாரம் மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அத்திக் அகமது படுகொலை செய்யப்பட்டார்.
அத்திக் அகமது: போலீசார் கஸ்டடியில் இருந்த நிலையில், ஊடகத்தினர் முன்னிலையில் பிரபல தாதா அத்திக் அகமதும் அவரது சகோதரரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். செய்தியாளர்கள் போல வந்த மூன்று பேர் இருவரையும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர்.தங்கள் பிரபலமாக வேண்டும் என்றே இந்த கொலையைச் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 3 பேர் ஷாக் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட 3 பேரும் 25 வயதுக்குக் குறைவானவர்கள் என்பது மற்றொரு ஷாக் தகவல்.
இப்போது கொலையாளிகள் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே அத்திக் அகமது கொலை குறித்து அல் கொய்தா பயங்கரவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அல் கொய்தா பயங்கரவாதக் குழுவின் இந்தியப் பிரிவான இந்தியத் துணைக் கண்ட அல்கொய்தா (AQIS) அத்திக் அகமது கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

அல் கொய்தா: இது குறித்து அவர்கள் 7 பக்கங்களுக்குத் தனியாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஈத் தினத்தன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், அந்த தீவிரவாதக் குழு அத்திக் அகமதை ஒரு தியாகி எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அத்திக் அகமது கொலைக்குப் பதிலடித் தாக்குதல்களை நடத்துவதாகவும் உறுதியளித்ததுள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாங்கள் ஒடுக்கப்படுவோருக்காக இருப்போம் - அது வெள்ளை மாளிகையாக இருந்தாலும் அல்லது டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லமாக இருந்தாலும் அல்லது ராவல்பிண்டியில் உள்ள பாக். பிரதமர் அலுவலகமாக இருந்தாலும் சரி.. டெக்சாஸிலிருந்து திகார் வரை அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் விடுவிப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
தியாகம்: மேலும், அத்திக் அகமது கொலை உ.பி.யில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் தியாகம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த கொலையை உத்தரப்பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசின் சதி என்றும் பயங்கரவாதிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, ரம்ஜான் மாதத்தின் கடைசி நாளில் வழக்கமான தொழுகைக்குப் பின்னர் பாட்னாவில் திடீரென சிலர் அத்திக் அகமதுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். மேலும், அவர்கள் மத்திய அரசுக்கும், உ.பி., அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
உபி-இல் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அத்திக் அகமது சமாஜ்வாதி கட்சியிலும் இருந்துள்ளார். மேலும், அவர் உபி சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும்கூட தேர்வாகியுள்ளார். அவருக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில், அவர்களில் இருவர் வெவ்வேறு வழக்குகளில் உபி-இல் சிறையில் உள்ளனர். அதேபோல மற்ற இரு மகன்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications