அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ்! நிமோனியாவால் பாதிப்பு!
டெல்லி: இந்திய திபெத் எல்லை படையில் பணிபுரியும் அபர்ணா குமார் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில பிரிவிலிருந்து ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளவர் அபர்ணா குமார் (44). இந்திய திபெத் எல்லை காவல் படையில் டிஐஜியாக உள்ள இவர் 8 நாட்கள் பயணம் செய்து கடந்த 13-ஆம் தேதி அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்தார்.
இதன் மூலம் இந்த மலையை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்துள்ளார். இவருடன் 7 பேர் கொண்ட குழு சென்றது. 111 மைல் தூரம் இவர்கள் சென்றுள்ளனர்.

சவால்கள்
இதையடுத்து, அபர்ணா குமார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். கடந்த 6 ஆண்டுகளாக மலை ஏற்றத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சவால்களை பகிர்ந்து கொண்டார்.

பனிபொழிவு
இதுகுறித்து அபர்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது,கடந்த 2014-ம் ஆண்டு மலையேற்ற பயிற்சியை முடித்தேன். அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. கடும் குளிர் நிலவும் தென் துருவத்தில் ஏறுவது மிகவும் கடினமாகவும், சவாலானதாகவும் இருந்தது. முகத்தில் பனி பொழிவு அடித்தது. கண்ணாடியே உடைந்துவிட்டது.

கணவர் பக்கபலம்
இதன்மூலம் 6 கண்டங்களில் உள்ள புகழ்பெற்ற சிகரங்களில் ஏறிவிட்டேன். 7-வதாக இந்த ஆண்டு வட அமெரிக்காவின் தினாலி சிகரத்தை அடைய திட்டமிட்டுள்ளேன். எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் சஞ்சய் குமார் உள்ளார்.

கொண்டாட்டம்
இந்த சிகரத்தில் ஏறியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றார் அபர்ணா குமார். இவரது சாதனையை இவருடன் பணியாற்றுவோர் கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎஸ் பயிற்சி
இது போன்று மிகவும் குளிர் பிரதேசத்தை கடந்ததால் இவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. நிமோனியா என்பது நுரையீரலில் தொற்று ஆகும். சாதனைப் படைத்த அபர்ணா குமார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications