Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 மணி நேரம் நீடித்த மீட்டிங்! யோகி ஆதித்யநாத் - பிரதமர் மோடி சந்திப்பில் நடந்தது என்ன? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உபி தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மாலை சந்தித்தார்.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. உபி, உத்தரகண்ட், மணிப்பூர். கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அக்கட்சியினர் அளித்த பிரம்மாண்ட வரவேற்பு இதற்கு ஒரு சாட்சியாகும்.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

குறிப்பாக இந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி கடும் போட்டி தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 255 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. சமாஜ்வாதி கட்சியால் 111 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. உபி-இல் கடந்த 40 ஆண்டுகளில் ஆளும் கட்சி ஒன்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

 பிரதமர் மோடி உடன் சந்திப்பு

பிரதமர் மோடி உடன் சந்திப்பு

தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் உத்தரப் பிரதேச அரசின் புதிய அமைச்சரவை குறித்து இருவரும் ஆலோசித்தாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் நீட்டித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பதவியேற்பு விழா தேதி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 பிரதமர் ட்வீட்

பிரதமர் ட்வீட்

யோகி ஆதித்யநாத் உடனான சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்தேன். உ.பி. தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு வாழ்த்தினேன். கடந்த 5 ஆண்டுகளில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர் அயராது உழைத்துள்ளார். வரும் ஆண்டுகளில், அவர் நிச்சயம் மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

 புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை

இந்த உபி தேர்தலில் பாஜகவுக்கு சில கசப்பான முடிவுகளும் காத்திருந்தது. உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தோல்வியடைந்தார். சிரத்து தொகுதியில் போட்டியிட்ட கேசவ் பிரசாத் மவுரியா, சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி கூட்டணிக் கட்சியான அப்னா தளம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வர் பதவியில் நீட்டிப்பரா இல்லை துணை முதல்வர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படுவாரா என்பதை பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலவை மூலம் சட்டசபையில் நுழையும் வாய்ப்பு கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு உள்ளது. அவரைத் தவிர மேலும் 10 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+