குலைநடுங்குதே.. "போய்ட்டியா லட்சுமி".. மலைக்கோயிலில் கள்ளக்காதலியுடன்.. அதுவும் அந்த "ஸ்டேட்டஸ்"
கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று அதை லைவ் வீடியோவாக ஒளிபரப்பி உள்ளார் ஒரு கொடூரன்
தர்மபுரி: ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.. அதை பார்த்தாலே குலை நடுங்குகிறது.. மனித உயிர்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா? என்ற கேள்வி பதைபதைத்துவிட்டு போகிறது. என்ன நடந்தது?
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது நாகமரை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் முனிராஜ்.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. முனிராஜ் எந்த வேலைக்கும் போவது கிடையாது..
எப்ப பார்த்தாலும் குடித்துவிட்டு, கலாட்டா செய்து, வம்பிழுத்து கொண்டு ஊர் சுற்றுவது என இருந்து வந்துள்ளார்.. பொறுப்பற்ற தந்தையை நினைத்து அவரது 2 மகன்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி வந்துள்ளனர்..

லட்சுமி லட்சுமி
அடிக்கடி வீட்டில் முனிராஜ் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம்.. இப்படித்தான் ஒருமுறை சண்டை போட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே போய்விட்டார்.. 7 மாதங்களாக இன்னும் வீட்டுக்கே போகாமலும் இருந்துள்ளார்.. அந்த நேரத்தில்தான் லட்சுமி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. லட்சுமிக்கும் திருமணமாகிவிட்டது.. 35 வயதாகிறது.. இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறாராம்.. இதனால், லட்சுமியுடன் முனிராஜ் நெருக்கமாகவே இருந்து வந்துள்ளார்.

மலைக்கோயில்
கடந்த 21ம்தேதி கர்நாடக மாநிலம் மாதாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு போகலாம் என்று கள்ளக்காதலி லட்சுமியை அழைத்து சென்றுள்ளார் முனிராஜ்.. இருவருமே மலைஉச்சிக்கு சென்றுள்ளனர்.. கோயிலுக்கு சென்று வழிபாடும் நடத்தி உள்ளனர்.. அப்போது திடீரென இவர்களுக்குள் தகராறு வந்துள்ளது.. வாக்குவாதம் முற்றியதால், ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், ஒரு பெரிய கல்லை எடுத்து, கல்லால் அடித்தே லட்சுமியை கொலை செய்துவிட்டார்.. பெண்ணை கொலை செய்வதை, லைவ் வீடியோவாக தன்னுடைய ஃபேஸ்புக்கிலும் ஒளிரப்பு செய்துள்ளார் முனிராஜ்.

லட்சுமி லட்சுமி
அடிக்கடி வீட்டில் முனிராஜ் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம்.. இப்படித்தான் ஒருமுறை சண்டை போட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே போய்விட்டார்.. 7 மாதங்களாக இன்னும் வீட்டுக்கே போகாமலும் இருந்துள்ளார்.. அந்த நேரத்தில்தான் லட்சுமி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. லட்சுமிக்கும் திருமணமாகிவிட்டது.. 35 வயதாகிறது.. இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறாராம்.. இதனால், லட்சுமியுடன் முனிராஜ் நெருக்கமாகவே இருந்து வந்துள்ளார்.

மலைக்கோயில்
கடந்த 21ம்தேதி கர்நாடக மாநிலம் மாதாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு போகலாம் என்று கள்ளக்காதலி லட்சுமியை அழைத்து சென்றுள்ளார் முனிராஜ்.. இருவருமே மலைஉச்சிக்கு சென்றுள்ளனர்.. கோயிலுக்கு சென்று வழிபாடும் நடத்தி உள்ளனர்.. அப்போது திடீரென இவர்களுக்குள் தகராறு வந்துள்ளது.. வாக்குவாதம் முற்றியதால், ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், ஒரு பெரிய கல்லை எடுத்து, கல்லால் அடித்தே லட்சுமியை கொலை செய்துவிட்டார்.. பெண்ணை கொலை செய்வதை, லைவ் வீடியோவாக தன்னுடைய ஃபேஸ்புக்கிலும் ஒளிரப்பு செய்துள்ளார் முனிராஜ்.

போயிட்டியா லட்சுமி
அப்போது ஆவேசத்துடன் அவர் பேசும்போது, என்னை கொலைக்காரனாக ஆக்கிட்டியே லட்சுமி, போட்டியிட்டியா, அந்த ஈஸ்வரன் என்னை கொலை செய்ய அனுப்பி வெச்சிட்டான்.. நீ இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சு கொலை செய்ய வெச்சுட்டான்.. இங்க பாருங்க எல்லாரும்.. இந்த கல்லை தூக்கி போட்டுத்தான் கொலை செய்தேன்.. நான்தான் லட்சுமியை கொலை செய்தேன் என்று ஆவேசமாக கத்தி பேசுகிறார்.. அதைவிட கொடுமை, லட்சுமியை கொலை செய்ததை, உடனடியாக தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ்ஸாகவும் வைத்துள்ளார்..

லைவ் வீடியோ
அதற்கு பிறகு அடுத்தசெகண்டே அங்கிருந்த மரத்தில் முனிராஜும் தூக்குப்போட்டு இறந்துவிட்டார்.. இதையெல்லாம் லைவ்வாக பார்த்து இணையவாசிகள் பதறிபோனார்கள்.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்தனர்.. வீடியோ லைவ்வாக ஓடியதால், உடனடியாக மலை மாதேஸ்வரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.. அங்கு சடலங்களாக கிடந்த 2 உடல்களையும் மீட்டனர்.. லட்சுமியின் உடலை மாதேஸ்வரன் மலை இடுக்கிலேயே அடக்கம் செய்யப்பட்டனர்..

பளபள சந்தனம்
முனிராஜ் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், இவர்களுக்குள் என்ன தகராறு? எதற்காக லட்சுமியை கொன்றார்? என்றே இதுவரை தெரியவில்லை.. அது மட்டும் மர்மமாகவே உள்ள நிலையில், இந்த லைவ் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.. இதை பார்ப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்து வருகின்றனர்.. முனிராஜ் மலை கோயிலில் மொட்டை போட்டிருப்பார் போல.. அந்த வீடியோவில், அவரது தலையிலும், நெற்றியிலும் சந்தனம் பளிச்சிடுகிறது.. ரத்தவாடையும் வீசி திணறடிக்கிறது.












Click it and Unblock the Notifications