அட இருப்பா.. பேசிட்டு இருக்கேன்ல.. குறுக்க பேசாத.. இபிஎஸ்ஸை கோபப்படுத்திய அந்த கேள்வி.. பரபர சம்பவம்
தருமபுரி: பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்ட தொண்டரிடம் முதல்வர் பழனிசாமி கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதல்வர் பழனிசாமி ஏற்கனவே திட்டங்களை வகுத்து இருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக வேட்பாளர்களுக்காகவும் முதல்வர் பழனிசாமி விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் .
இந்த நிலையில் நேற்று தருமபுரியில் நடந்த பிரச்சாரம் ஒன்றில் முதல்வர் பழனிசாமி கோபமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி கேட்டார்
தருமபுரியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்த போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர்.. எங்கள் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. தருமபுரி தொகுதி வறட்சியாக இருக்கிறது. பல காலமாக தருமபுரி வறட்சியாகவே உள்ளது. எங்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

கோபம்
இதை கேட்ட முதல்வர் பழனிசாமி..அதை பற்றி அப்பறம் பேசுகிறேன்.. அதற்கு அப்பறம் வருகிறேன் என்று கூறினார். ஆனால் கூட்டத்தில் இருந்த தொண்டர் விடாமல் தருமபுரிக்கு என்ன செய்தீர்கள், தருமபுரி ஏன் இப்போதும் வறட்சியாக இருக்கிறது என்று கேட்டார்.

பேசாத!
இதை கேட்டதும் பொறுமையிழந்த முதல்வர் பழனிசாமி.. கோபமாக.. அட இருப்பா.. பேசிட்டு இருக்கேன்ல.. குறுக்க பேசாத.. அதை பத்தி கடைசியாக பேசுவேன் .. இடையில் பேசாதே என்று கோபமாக குறிப்பிட்டார். இதை கேட்டு அங்கிருந்த அதிமுக தொண்டர்களும் கோஷமிட தொடங்கினார்கள்.

இழுத்து சென்றனர்
ஆனால் அதன்பின்பும் அந்த நபர் தொடர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கிருந்து அதிமுக தொண்டர்கள் அந்த நபரை அப்புறப்படுத்தினார்கள். நான்கு பேர் சேர்ந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியே அனுப்பினார்கள்.












Click it and Unblock the Notifications