நத்தம் அருகே அதிகாலையில் கேட்ட “சத்தம்”.. 2 பேர் உடல் சிதறி பலி.. எஸ்கேப் ஆன பட்டாசு ஆலை உரிமையாளர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது ஆவிச்சிப்பட்டி. இப்பகுதியில் பூலாமலை அடிவாரத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்த பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் பணியின்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நத்தம் போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி, வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்
மயிலாடுதுறையில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை.. 2 பேர் பலி.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் நேற்று பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியான நிலையில் நத்தம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications