Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கறிக்கடைக்காரை பார்த்ததுமே.. டக்னு போனை கட் பண்ணிட்டாராம் ஜாஸ்மின்.. திணறுது திண்டுக்கல் வேடசந்தூர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அந்த இளம்பெண்.. அவரை கத்தியால் வெட்டிய கணவரிடம் தீவிரமான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் அரபு அலி.. 30 வயதாகிறது.. இவர் வேடசந்தூரில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் ஜாஸ்மின்..

Dindigul incident and why did Butcher take this sudden decision, what happened in Vedasandur

ஜோதிலட்சுமி என்பது இவரது ஒரிஜினல் பெயர்.. 8 வருடங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

சந்தேகம்: ஜாஸ்மினுக்கு இப்போது 25 வயதாகிறது.. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்வில், திடீரென சந்தேகப்புயல் வீச துவங்கிவிட்டது.. ஜாஸ்மினின் நடத்தையில், அரபு அலிக்கு சந்தேகம் துவங்கியது.. இந்த சந்தேகம் நாளடைவில் வலுக்க துவங்கி, கடைசியில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வரை வந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று மதியம் அரபு அலி வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார்.. அவர் வீட்டிற்குள் நுழையும்போது, ஜாஸ்மின் யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.. அரபு அலியை பார்த்ததுமே, டக்குனு போனை கட் செய்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அரபு அலி, ஜாஸ்மினிடம் கேட்டுள்ளார்.. மறுபடியும் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.

ஆத்திரம்: ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அரபு அலி, ஆடு வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டுவந்து, ஜாஸ்மினின் தலையை அறுத்தார்.. பிறகு, கை, கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

ரத்த வெள்ளத்தில் அலறி விழுந்த ஜாஸ்மினை, அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு, முதலுதவி சிகிச்சை மட்டுமே தரப்பட்டது..

விசாரணை: பிறகு, உடனடியாக மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.. இதனிடையே, அரபு அலியை வேடசந்தூர் போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

காதலித்து கல்யாணம் செய்து, மனைவியை அரிவாளாலும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை வேடசந்தூரில் ஏற்படுத்தி வருகிறது. ஜாஸ்மின் சீரியஸாக இருக்கிறாராம்.. சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+