Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கவுண்டுக்கு வரும் 28 ஆயிரம்..அரசு பள்ளி மாணவர்கள் டார்கெட்! உஷார் பெற்றோர்களே.. அரசின் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி வங்கிக் கணக்கு எண்ணை பெற்று மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மோசடி தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

எல்லாம் டிஜிட்டல் மயமாகி போய்விட்ட இந்த ஆன்லைன் யுகத்தில் தற்போது மோசடிகளும் நாளுக்கு நாள் பல்வேறு விதங்களில் அரங்கேறி வருகிறது. "கார்ட் மேலே 16 நம்பர் சொல்லு சார்" கும்பல் தற்போது வித்தியாச வித்தியாசமாக யோசித்து பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வருகிறது.

cybercrime police crime

வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் தொடங்கி, ஆன்லைன் கிப்ட் மோசடி, உணவு டெலிவரி மோசடி என பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து மோசடி கும்பல் அப்பாவி படிக்காத பெற்றோர்களிடம் பணத்தை பறித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு வங்கி கணக்கு பள்ளிகளிலேயே தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக பெற்றோர்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அரசு தரும் உதவி தொகை அந்த கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு உதவி தொகைக்காக காத்திருக்கும் பெற்றோர்களை குறி வைத்து மோசடி கும்பல் பணத்தை திருடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெற்றோரை தொடர்பு கொண்ட கும்பல்," நான் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன்.. தங்கள் மகனுக்கு அரசு தரும் 28 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக உங்கள் வங்கி கணக்கை சரி செய்ய வேண்டும்" எனக் கூறியிருக்கின்றனர்.

வங்கி கணக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.. அதில் நாங்கள் அடிக்கடி பணம் போட்டு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என பெற்றோர்களும் வெள்ளந்தியாக பேச நான்காயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் தான் உதவித்தொகை கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் உங்கள் கணக்கில் நிறைய பணம் இருப்பது போல தெரிகிறது.. அந்த பணத்தை தற்போது மாற்ற வேண்டும் எனக் கூறி உள்ளனர்.

இதனை நம்பிய பெற்றோர் அவர்களின் வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்டவற்றை தந்திருக்கின்றனர். இதை அடுத்து மோசடி கும்பல் அவர்களை வங்கி கணக்கிலிருந்து சுமார் 10,000 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு இதே பாணியில் பண மோசடி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அந்த நேரத்தில் சற்று நிதானம் இழக்கும் நபர்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளில் நடக்கும் இறை வணக்க கூட்டத்தில் இது போன்ற மோசடிகள் குறித்து மாணவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில்,"திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு/அரசு உதவி பெறும்/தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி வாரிய அலுவலர் என்ற பெயரில் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு போதிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளிடம் காலை இறைவணக்கக் கூட்டத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+