ஓட்டு போட லீவு விட்டா..என்னய்யா பண்ணி வச்சுருக்கீங்க..! 100% புக் ஆன ரூம்கள்! கொடைக்கானல் ரொம்ப பிசி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓட்டுப்பதிவிற்காக அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் அனைத்து ஹோட்டல் அறைகளும் 100 சதவீதம் புக் ஆகியிருப்பது 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடைய தடையாய் மாறியிருக்கிறது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-வது வாரத்தில் கோடைமழை பெய்யும். சித்திரையும், குளு, குளு சீசனும் ஒன்றாக தொடங்கும். அந்த வகையில் தற்போது, கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியிருக்கிறது.

Hotels booked in Kodaikanal due to continuous holiday due to election

ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். பொதுவாகவே வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

கொடைக்கானல்: இரு தினங்களுக்கு முன்பு கூட பெருமாள் மலையை தாண்டி சுமார் 10 கி.மீ. துரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு வரும் ஏப். 19ம் தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏப்.19 ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அடுத்தடுத்த நாட்களான சனி, ஞாயிறும் விடுமுறை தினங்கள் தான். இதனால், ஒரு சேர 3 நாட்கள் கிடைப்பதால் எல்லோரும் சுற்றுலா பயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.

100% வாக்குப் பதிவு: அரசு 100 சதவீத ஓட்டளிப்பை உறுதிப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 85 க்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே அஞ்சல் ஓட்டு, பத்திரிக்கையாளர்கள், போலீஸ், அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் ஓட்டு என அனைத்து வகைகளிலும் அனைவரையும் ஜனநாயக கடமையாற்ற வைக்க மெனக்கெட்டு வருகிறது.

சுற்றுலா செல்லும் மக்கள்: ஆனால், பலர் அதனை பற்றி கவலைப்படாமல் டூர் ப்ளான் செய்துள்ளனார். குறிப்பாக, வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் படையெடுக்க தயாராகியிருக்கின்றனர். ஓட்டு போட செல்கிறோம் என ஏப்.18 ம் தேதியே விடுமுறை பெறும் இவர்கள் ஏப். 18 ம் தேதி மாலை கொடைக்கானலில் தஞ்சம் புக இருக்கின்றனர். அன்று முதல் ஏப்.19, 20, 21 என 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட இருக்கின்றனர். கொடைக்கானலில் உள்ள அனைத்து ஓட்டல்களின் அறைகளும் ஏப்.18 ம் தேதி முதலே 'புக்' செய்யப்பட்டிருக்கிறது.

ரொம்ப பிசி: இதனை அரசு தடுக்க வேண்டியது கட்டாயம்.. ஓட்டுப் பதிவிற்கு பின்புதான் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது ஓட்டளிக்கும் போது வைக்கப்படும் மை இருக்கிறதா என்று சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். இல்லையேல், ஓட்டு சதவீதம் குறைவதை தடுக்க வாய்ப்பில்லை. மாற்று ஏற்பாடு என்பது கட்டாயம். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்களிடம் பேசிய போது, வழக்கமாக கொடைக்கானல் கோடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.. ஆனால் தேர்தல் காரணமாக தொடர் விடுமுறையால் இந்த முறை வழக்கத்தை விட புக்கிங் அதிகமாக இருப்பதாகவும், வீடுகள் கூட தற்காலிக ஓட்டல் அறைகளாக மாறியிருப்பதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+