1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன?.. திக்திக் கொடைக்கானல்
திண்டுக்கல்: புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கேரள இளைஞர்களின் கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பலியாகினார்.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது வகையில் விபத்து நடந்து உயிர் பலி ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டு உயிர் பலி ஏற்படாத வண்ணம் போலீஸார் பல்வேறு விதிகளை வகுத்துள்ளனர்.
எனினும் ஊர் விட்டு ஊர் போயாவது உயிரை மாய்த்து கொள்கின்றனர். இப்படிதான் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கேரள மாநிலம் அமலாஹூஸ் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு உள்ளிட்ட 7 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர்.

1000 அடி
இதைத் தொடர்ந்து பழனியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சொகுசு காரில் நேற்று வந்தனர். அப்போது கொண்டை ஊசி வளைவில் உள்ள சவரிக்காடு அருகே கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒருவர் பலி
அந்த நேரத்தில் கார் கதவை திறந்து குதித்ததில் 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவரும் அதுபோல் குதித்த போது மரத்தின் மீது சிக்கி பலியாகிவிட்டார். இன்னும் இருவரது நிலை என்ன என்பது தெரியவில்லை.

விசாரணை
காயமடைந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் போது இளைஞர்கள் குடிபோதையில் இருந்தனரா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

பனிமூட்டம்
மேலும் கொடைக்கானலில் தற்போது பனிப்பொழிவு காரணமாக முன்னால் செல்லும் வாகனம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் சாலை தெரியாமல் பள்ளத்தில் வாகனத்தை விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications