என்னது தவெக ஆட்சியை பிடிக்கிறதா.. சிரஞ்சீவி கதை தெரியுமா.. செல்வப்பெருந்தகை தக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்று வாக்கு சதவீதத்துடன் முடிந்துள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் தவெக இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் தாக்கம், திமுக கூட்டணியின் பலம் உள்ளிட்ட கணக்கீட்டுடன் செல்வப்பெருந்தகை தடாலடி கருத்தை கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக ஆட்சியமைப்பது கனவில் வேண்டுமானால் நடக்கலாம். நிஜத்தில் அது நடக்காது. அவரை சுற்றியிருக்கிற ஆட்கள் அப்படி. நேற்று முளைத்த காளான்களால் தமிழகத்தை ஆள முடியாது.

selvaperunthagai-selvaperunthagai-slams-tvk-vijay-he-also-explains-chiranjeevi-story

திமுகவுக்கு 40 விழுக்காடு வாக்கு

தமிழகத்திற்கென்று கலை, கலாச்சாரம், பாரம்பரியம், இலக்கணம் இருக்கிறது. எல்லோரும் எம்ஜிஆர், என்டிஆர் ஆகிவிட முடியாது. இந்த தேர்தலில் அவர்கள் கணிசமான வாக்குகளை பெறலாம். கூட்டல், கழித்தல், மக்களின் மனநிலை, கட்சிவாரியான ஓட்டு வங்கி ஆகியவற்றை கழித்து பார்த்தால் உண்மை தெரியும். குறைந்தபட்சம் 40 விழுக்காடு வாக்கை திமுக கூட்டணி பெறும்.

நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. 46.65 விழுக்காடு என்று சர்வேயில் வந்தது. இந்த எண்ணிக்கையும் தேமுதிக, ஓபிஎஸ் ஆகியோர் இணைவதற்கு முன்பு தான். அதன் பிறகு பலர் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் எங்கள் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த 40 விழுக்காட்டை தொடுமளவுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் வாக்கு வங்கி கிடையாது.

விஜய்யால் முடியாது

எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் அதிகமாக தெரிகிறது. மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டனர். இந்த தீர்ப்பு மே 4 ஆம் தேதி வாசிக்கப்படும். திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இதில் மாற்றுக் கருத்தில்லை. சில ராமானுஜர்கள், கணக்கு புலிகள், மேதாவிகள் வேறு மாதிரி கணக்கு போடலாம்.

200 தொகுதிகளுக்கு ஒன்று கூட குறையாது. விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட கூடாது. எம்ஜிஆர் நிறைய செய்துவிட்டுதான் அரசியலுக்கு வந்தார். சிரஞ்சீவி பிரஜா கட்சியை தொடங்கியபோது 18 சதவீதம் வாக்கு வங்கியுடன், சில தொகுதிகளை வென்றும் அவரால் கட்சியை நடத்த முடியவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரே மீண்டும் நடிக்க சென்று விட்டார்"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+