‘புஷ்பா’ பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்.. விறுவிறு சேஸிங் - சிக்கிய கடத்தல் மன்னனான திமுக புள்ளி!
சித்தூர் : ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற வாகனங்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செம்மர கடத்தல் மன்னனான திமுக பிரமுகர் பெருமாளை போலீசார் கைது செய்தனர். இவர் திமுக ஒன்றிய சேர்மனின் கணவர் ஆவார்.

அதிரடி சோதனை
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்ட எஸ்.பி நிஷாந்த்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தலைமையில் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சல்லடை போட்டு வாகனங்களை சோதனை செய்து வந்தனர்.

நிற்காமல் சென்ற வாகனங்கள்
திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் செர்லோபள்ளி எனும் இடத்துக்கு அருகில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் 3 கார்கள் நிற்காமல் சென்றுள்ளன. இதனால் சந்தேகமடைந்த ஆந்திர போலீசார் அந்த வாகனங்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.

செம்மரம் பறிமுதல்
போலீசார் தடுத்து நிறுத்திய அந்த வாகனங்களில் இருந்த சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரம் கடத்தி வந்த 6 பேர் தப்பிய நிலையில் போளூரை சேர்ந்த பெருமாள் மற்றும் ஆரணியை சேர்ந்த வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக சேர்மனின் கணவர்
இதில் பெருமாள் என்பவர் மீது ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் 'புஷ்பா' திரைப்பட நாயகன் போல பல நூதன வழிகளில் செம்மரங்களை கடத்தி வரும் 'கடத்தல் மன்னன்' என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பெருமாளின் மனைவி சாந்தி, தி.மு.க போளூர் ஒன்றிய சேர்மன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடுதல் வேட்டை
செம்மரக் கட்டைகளுடன் 4 வாகனங்களையும் கைப்பற்றிய போலீசார், தப்பிச் சென்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சி, போளுரை சேர்ந்த பாலாஜி, கல் குப்பத்தை சேர்ந்த அஜித், போளூரை சேர்ந்த வினோத், சரத், சென்னையை சேர்ந்த ரமேஷ், குமார் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் செம்மரக்கட்டைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியானது.

கூட்டாக கடத்தல்
இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்தி சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளிகளான நான்கு பேருக்கு கை மாற்றி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications